வடக்கு

வடக்கு ஆளுநர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

வடக்கு மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை தனது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாகாணத்திலுள்ள மக்களின் இலக்குகளை அடைவதற்கு மாகாண நிர்வாகம் சிறப்பாக இருப்பது அவசியம் என கருதப்படும் நிலையிலேயே ஆளுநர் மாற்றம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version