நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்க திட்டம் – இலங்கை போக்குவரத்து சபை..!
நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்க திட்டம் – இலங்கை போக்குவரத்து சபை..! இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் அனைத்து பேருந்துகளையும் நடத்துனர்கள் இன்றி இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையானது எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகள் இயங்கத் தொடங்கும் முன் பயணசீட்டுக்கள் வழங்கப்படும் என்றும், அந்த பயணசீட்டுகளை பேருந்து சாரதியிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
