நாட்டில் கடுமையான கண்காணிப்பின் பின்னரே இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

