கரையோரத்தில் சுற்றுலாத் தளங்களை உருவாக்கும், இலங்கை
இலங்கையின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பத்தரமுல்லை, செத்சிரிபாயவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.
