
உலகின் மிகப் பெரிய இந்த ‘ஐகான் ஒப் த சீஸ்’ கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும்.
இந்த கப்பலானது 1,200 அடி (365 மீட்டர்) நீளத்தையும், 250,800 தொன்கள் எடையும் கொண்டது. அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ள அதன் முதல் கடல் பயணத்தின் போது ஐகான் ஒப் த சீஸ் கப்பல் 2,350 க்கு நபர்களையும், 5,610 பயணிகளையும் ஏற்றிச்செல்லும்.
இது அதன் உண்மையான கொள்ளளவை காட்டிலும் குறைவான எண்ணிக்கை ஆகும் என்று கருத்துக்கள் வெளியாகின்றன. இந்த கப்பலில் மொத்தமாக 7,960 பயணிகள் பயணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
