க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை 10 ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12 ஆம் தரத்திலும் நடாத்த வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சுதந்திரமான தேசிய கல்வி ஆணையத்தை நிறுவ முன்மொழிந்துள்ளதாகவும் நான்கு துறைகளின் கீழ், கல்வியை உயர்த்துவதற்கான பரிந்துரைகளை குழு முன்வைத்துள்ளதாகவும் அதன் தலைவரான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
