உள்ளூர் செய்திகள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள நோய்கள்

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே வாய் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக பல் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமானோருக்கு பற்கள் சிதைவடைவதாக பல் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்களில் சுமார் 96 சதவீதமானோர் சரியான சிகிச்சை பெறுவதில்லை எனவும் குறித்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் மஞ்சுள ஹேரத் தெரிவித்துள்ளார். 

Exit mobile version