இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிக்காவில் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
அதிகபட்சமாக அலிக் அத்தனேஸ் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற மைல்கல்லை ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டியுள்ளார்.
