ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜப்பானின் ஊடக மற்றும் இராஜதந்திர துறைக்கான பிரதிப்பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ, இலங்கை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
ஜப்பானின் பரிசீலனைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பல முதலீட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜப்பானின் தற்போதைய கவனம், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு முடிந்தவரை விரைவாகவும், சுமுகமாகவும் உதவுவதாக மட்டுமே இருக்கும் என்று ஒகானோ கூறியுள்ளார்.

