IPL ல் தடம்பதித்த இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வால் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆரம்ப வீரராக களமிறங்கி தன்னை அணியில் நிலை நிறுத்திக் கொண்டார். அறிமுக போட்டியில் 350 பந்துகளை சந்தித்து ஆட்டமிழப்பின்றி 143 ஓட்டங்களை குவித்துள்ளது அனைத்து கிரிக்கெட் வல்லுநர்களையும் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோஹித் சர்மாவுடன் முதல் விக்கட்டுக்கு 229 ஓட்டங்களை பகிர்ந்ததும் கோலியுடன் மூன்றாம் விக்கட்டுக்கு 72 ஓட்டங்களை பகிர்ந்து துட்டுப்பாடுவதும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆட்டத்தின் 3ம் நாள். இந்திய அணி 500 ஓட்டங்களை கடந்து துடுப்பாட்டத்தை நிறுத்தி மேற்கிந்தியா அணியை அலைக்கும் போது இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய நிலை வரலாம் என்பதால் மேற்கிந்தியா அணி நிதானமாக விளையாட வேண்டும் எனினும் இந்திய அணிக்கு சாதகமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
